News Just In

8/09/2024 01:36:00 PM

இலங்கை அரச சேவை திணைக்களங்களுக்கிடையிலான கிறிக்கட் போட்டியில் 30 ஓட்டங்களினால் இலங்கை தபால் திணைக்களம் வெற்றிபெற்று சம்பியன்களாக தெரிவு



(அஸ்ஹர் இப்றாஹிம்)

இலங்கையிலுள்ள அரச சேவை திணைக்களங்களுக்கிடையில் மகர சிறைச்சாலை மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கிறிக்கட் சுற்றுப் போட்டியில் இலங்கை தபால் திணைக்களம் 30 ஓட்டங்களினால் வெற்றியீட்டி 2024 ஆம் ஆண்டுக்கான சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை தபால் திணைக்களத்திற்கும்,இலங்கை மின்சார சபைக்கும் இடையிலான இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை தபால் திணைக்கள அணியினர் குறித்த ஓவரில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 113 ஓட்டங்களைப் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மின்சார சபை அணியினர் சகல விக்கட்டுக்களையும் இழந்து 83 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டனர்.

இலங்கை தபால் திணைக்களத்தின் வெற்றிக்கு காரணமான சகலருக்கும் இலங்கை தபால் திணைக்கள விளையாட்டுக்கழக தலைவர் தம்மிக்க ஏக்கநாயக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

No comments: