News Just In

7/02/2024 10:09:00 AM

கனடிய வானில் திடீரென தோன்றிய மர்ம ஒளி : அச்சத்தில் மக்கள்




கனடாவில்(Canada) மானிடோபா மாகாணத்தில் வானில் தோன்றிய மர்ம ஒளியினால் அப்பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் இரண்டு கோளங்களாக நெருப்பு பிழம்பு போல அது பிரகாசமாக ஒளிர்ந்துள்ள நிலையில் அது வேற்றுக்கிரகவாசிகளின் பறக்கும் தட்டுகளாக இருக்குமா என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த மர்ம ஒளியானது அருகில் சென்று பார்த்தபோது மேலும் இரண்டு கோள உருண்டைகள் போல ஒளிர ஆரம்பித்துள்ளது.

இவை மொத்தமாக 4 சூரியன்கள் ஒளிர்வதைப் போல் காட்சியளித்துள்ளன.

இந்த நிகழ்வை காணொளியை எடுத்த தம்பதிகள் அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

No comments: