News Just In

6/22/2024 09:43:00 PM

பிள்ளையானின் ஆதரவு ரனிலுக்கு !





எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தானும் தனது கட்சியும் ஆதரவளிக்கவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் (TMVP) தலைவரும் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி இன்று (22) பிற்பகல் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் அவரது கட்சி உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

மட்டக்களப்பில் உள்ள அவர்களின் கட்சியின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இதன்போதே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்

No comments: