News Just In

5/14/2024 03:59:00 PM

மருதமுனை புத்திஜீவிகளின் பங்கெடுப்புடன் ஹரீஸ் எம்.பியை சந்தித்த சமூக செயற்பாட்டாளர்கள் !



நூருல் ஹுதா உமர்
கல்முனை மாநகர மருதமுனை பிரதேச புத்திஜீவிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று மருதமுனையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
ஊவா வெல்லச பல்கலைக்கழக பதிவாளர் எம்.எப். ஹிபதுல் கரீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசியல் போக்குகள், மருதமுனை அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், சர்வதேச நிகழ்ச்சி நிரலில் முஸ்லிங்களின் பாதிப்புக்கள், இளைஞர்களினதும் கல்முனை பிராந்தியத்தினதும் மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது மருதமுனை பிரிஸ்பன் விளையாட்டுக்கழகம் மற்றும் டில்கோ விளையாட்டுக்கழகம் ஆகியவற்றுக்கு பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து குறித்த விளையாட்டுக்கழக தேவைகளை நிபர்த்திக்குமுகமாக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டுக்கான ஆவணங்களை விளையாட்டுக்கழக நிர்வாகிகளிடம் கையளித்தார்.

இதன்போது இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் ஏ.ஏ.எம். நுபைல், சட்டத்தரணி அனுஜ் பிர்தௌஸ், சட்டத்தரணி ஏ.எம்.எம்.றிப்கான், சமூக செயற்பாட்டாளரும், இளைஞர் இணைப்பாளருமான எம்.எஸ்.எம்.பௌஸ், பாராளுமன்ற உறுப்பினரின் ஆலோசகர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், இணைப்பு செயலாளர் சப்ராஸ் நிலாம், மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள், பொது அமைப்புக்களின் பிரதானிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments: