News Just In

5/18/2024 10:51:00 AM

ஆழ்கடலில் தத்தளித்த 3 வாழைச்சேனை மீனவர்களை காப்பாற்றிய கடற்படையினர்; ஒருவர் சடலமாக மீட்பு!



(எஸ்.அஷ்ரப்கான்)

வாழைச்சேனையில் இருந்து கடந்த 12 ஆம் திகதி ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றமீனவர்களின்இயந்திரபடகுஒன்றுஉடைந்துஅதுநீரில்மூழ்கியதையடுத்து, கடலில் தத்தளித்த3 மீனவர்களை உயிருடனும் ஒருவரை சடலமாகவும் நேற்று (17)வெள்ளிக்கிழமை மாலையில் கடற்படையினர் மீட்டுள்ளனர்.ஒருவர் காணாமல் போயுள்ளார் என வாழைச்சேனைப்
பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை நிந்தவூர் 9 ஆம் பிரிவு அரசடி மையவாடிவீதியைச் சேர்ந்த 42 வயதுடைய முகமது அலியார்இபிறாலெப்பை என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கல்முனையைச் சேர்ந்த 5 மீனவர்கள்வாழைச்சேனைமீன்பிடித்துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்காகக் கடந்த 12 ஆம் திகதி கடலுக்கு இயந்திர படகுஒன்றில் சென்றுள்ளனர்.ஆழ்கடலில் படகு உடைந்து நீரில் மூழ்கியதையடுத்து அதில் இருந்த மீனவர்கள் தப்பி கடலில் தத்தளித்து
கொண்டிருந்தனர்.


கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர்மீனவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தமையைநேற்று (17) வெள்ளிக்கிழமை மாலை கண்டனர். தத்தளித்துக் கொண்டிருந்த 3 மீனவர்களை உயிருடனும் ஒரு
வரை சடலமாகவும் மீட்டனர். ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இதில்உயிருடன்மீட்டகப்பட்டஒருவர்ஆபத்தானநிலையில்இருந்தமையையடுத்து அவரை திருகோணமலைகடற்படை முகாமிற்குக் கொண்டு சென்று வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.ஏனைய இருவரையும் மற்றையவரின் சடலத்தையும்வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திற்கு நேற்று இரவுகடற்படையினர் கொண்டுவந்து தம்மிடம் ஒப்படைத்துள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டது.இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.




No comments: