
சென்னை: வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தவெக தலைவர் விஜய்யுடன் வாய்ப்பு அமைந்தால் ஒன்று சேர தான் காத்திருப்பதாகவும், தவெக சார்பில் நடைபெறும் மாநாட்டுக்கு அழைப்பு வந்தால் செல்வேன் என்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “கோயில், சாமி, சாதி, மதம் ஆகியவற்றை மட்டுமே பேசிக்கொண்டு இன்னும் எத்தனை காலத்துக்கு ஜெயிக்க முடியும். பாஜகவால் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் செய்த ஒரு சாதனையைக் கூட சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்க முடியவில்லை. அதற்கு பதிலாக காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கோயிலை இடித்துவிடுவார்கள், முஸ்லிம்களுக்கு அனைத்தையும் வாரி வழங்கிவிடுவார்கள் என பிரதமர் தனது பிரச்சாரத்தில் பேசிக் கொண்டிருக்கிறார். இது ஒரு தலைவருக்கு அழகல்ல.
இதைப்பற்றி மட்டுமே சிந்திப்பவர்கள் மக்களைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால் கேஜ்ரிவால் கூறியதை போல முதல்வர்கள் ஸ்டாலின், மம்தா, பினராயி விஜயன் போன்றோரின் கைது உறுதியாக நடக்கும். சமூகத்தில் எதைப் பற்றியும் யோசிக்காமல் எதை வேண்டுமானாலும் பேசிவிட்டு சென்றுவிடுகின்றனர்.
No comments: