News Just In

3/10/2024 09:55:00 AM

மட்டக்களப்பில் தேர்தல் முறை, சட்டக்கட்டமைப்பு தொடர்பான செயலமர்வு!




எஸ் ஐ.எம்.நிப்ராஸ் (JP)
மட்டக்களப்பு மாவட்ட இளைஞர், யுவதிகள் மற்றும் மாவட்டங்களில் செயற்படும் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கான தேர்தல் முறைகள் மற்றும் சட்டக்கட்டமைப்பு தொடர்பான பயிற்சிச் செயலமர்வொன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வு கிராமிய அபிவிருத்தித்திட்டமிடல் அமைப்பின் (RDPO) ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் வி.ரமேஷானந்தன் தலைமையில் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் கடந்த 06.03.2024ம் திகதி இடம்பெற்றது.

கிராமிய அபிவிருத்தி த்திட்டமிடல் அமைப்பின் (RDPO) ஏற்பாட்டில் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் (Centre for Monitoring Election Violence) பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இச்செயலமர்வின் வளவாளராக ஓய்வுபெற்ற தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.எம்.முகமட், வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலைய தேசிய இணைப்பாளர் ஏ.எம்.என்.விக்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வளவாண்மை மேற்கொண்டனர்.

இச்செயலமர்வில் கிராமிய அபிவிருத்தி த்திட்டமிடல் அமைப்பின் கொள்வனவு உத்தியோகத்தர் பீ.மேகலநாதன், கள உத்தியோகத்தர் எஸ்.உபதாரணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன் போது தேர்தல் வன்முறை கண்கானிப்பு மையத்தினால் வழங்கப்பட்ட விரிவுரைகளில்
ஜனநாயகத்தேர்தல் மற்றும் பங்கேற்புடனான ஆளுகை, தேர்தல் பிரசார நிதியாக்க ஒழுங்குபடுத்தல் மற்றும் இலங்கையின் தேர்தல் முறைமைகள் தொடர்பான பிரச்சினைகள், பிரசார நிதியாக்க ஒழுங்குபடுத்தல் அறிக்கையிடல் போன்ற தேர்தல் ஜனநாயகத்தில் குடிமக்களின் வகிபாகம், ஜனநாயகத்தை வலுப்படுத்தல், பிரசார நிதிக்கண்காணிப்புக்கான குடிமக்களை அறிவூட்டும் முயற்சிகள், உத்திகள் என்பன விரிவுரையாளர்களால் வழங்கப்பட்டது.

மேலும், அரசினால் கொண்டு வரப்பட்ட 2023ம் ஆண்டு 3ம் இலக்க தேர்தல் சட்டம் தொடர்பாக மக்களுக்கு ஏற்படவுள்ள நன்மைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இச்சட்டதிட்டங்களை எவ்வாறு கையாள்வது?, ஜனநாயகத்தை எவ்வாறு வலுவூட்டல்? என்பன தொடர்பாகவும் பயிற்சிகள் வழங்கப்பட்டது.

No comments: