![](https://athavannews.com/wp-content/uploads/2023/04/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF-700x375.jpg)
கடந்த 8 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், பல்வேறு தரப்பினரும் குறித்த சம்பவத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நாளை கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments: