சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்
அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலக பிரிவுகளையும் உள்ளடக்கியதாக கப்சோ நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் "Youth
Media Project" வேலைத்திட்டம் கப்சோ நிறுவனத்தின் திட்டப்பணிப்பாளர் ஏ.ஜே காமில் இம்டாட் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இந் நிகழ்ச்சிட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வு கல்முனையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று(11) நடை பெற்றது.
GCERF ,HELVETAS நிதியுதவியுடன் GAFSO நிறுவனத்தின் அமுல்படுத்தலில் செயற்படுத்தப்படும் HOPE OF YOUTH வேலைத்திட்டத்தின் கீழ் Youth Media Project ஆனது நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ் வேலைத்திட்டமானது அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட 30 சமூக ஊடக ஆர்வளர்களை கொண்டு ஒரு வருட காலமாக இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வுகளுக்கு வளவாளராக 10ம் ,11ம் திகதிகளில் விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி எம் பைரூஸ் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட சமூக ஊடக ஆர்வலர்களுக்கு "ஊடக எழுத்தறிவு" சம்மந்தமான தெளிவினை வழங்கி இருந்தார்.
GCERF ,HELVETAS நிதியுதவியுடன் GAFSO நிறுவனத்தின் அமுல்படுத்தலில் செயற்படுத்தப்படும் HOPE OF YOUTH வேலைத்திட்டத்தின் கீழ் Youth Media Project ஆனது நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ் வேலைத்திட்டமானது அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட 30 சமூக ஊடக ஆர்வளர்களை கொண்டு ஒரு வருட காலமாக இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வுகளுக்கு வளவாளராக 10ம் ,11ம் திகதிகளில் விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி எம் பைரூஸ் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட சமூக ஊடக ஆர்வலர்களுக்கு "ஊடக எழுத்தறிவு" சம்மந்தமான தெளிவினை வழங்கி இருந்தார்.
No comments: