News Just In

2/14/2024 06:01:00 AM

மட்டக்களப்பிலிருந்து உடனே வெளியேறுமாறு லண்டனில் இருந்து வந்த அழைப்பு!



இலங்கையில் எந்த ஒரு போர் சூழலும் இல்லாத சந்தர்ப்பத்தில் கிராமம் கிராமமாக தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் எனவும், இவற்றை வெளியுலகத்திற்கு கொண்டுவர முயற்சித்ததன் விளைவாக மட்டக்களப்பில் இருந்து வெளியேறுமாறு தனக்கு அழைப்பு வந்ததாகவும் சிரேஷ்ட ஊடகவியலாளர் இரா. துரைரத்தினம் தெரிவித்துள்ளார்.

சுவிஸர்லாந்தில் இடம்பெற்ற கிழக்கின் சிவந்த சுவடுகள் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும், மட்டக்களப்பு மாவட்டம் உள்ளிட்ட கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள் அனைத்தும் வெளியுலகத்திற்கு சொல்லப்படாமல் மூடி மறைக்கப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் எழுதிய கிழக்கில் சிவந்த சுவடுகள் நூல் அறிமுக விழா சுவிஸ் சூரிச் நகரில் ஊடகவியலாளர் தா.வேதநாயகம் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குறித்த நிகழ்வின் பிரதம அதிதியாக சுவிட்சர்லாந்து சோசலிச ஜனநாயக கட்சி உறுப்பினரும், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரும், தொழிலதிபருமான கலாநிதி இராசமாணிக்கமும், நிகழ்வின் சிறப்பு அதிதியாக எழுத்தாளரும் தொழிலதிபருமான கலாநிதி நாகேஸ்வரன் அருள்ராச ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

No comments: