News Just In

11/10/2023 08:01:00 AM

யாழில் பணக்காரர்களை இலக்கு வைத்து பாரிய மோசடியில் ஈடுபட்ட போலி மந்திரவாதி!

யாழில் பணக்காரர்களை இலக்கு வைத்து நபரொருவர் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், அது தொடர்பில் வர்த்தகர்கள் உள்ளிட்டவர்கள் விழிப்புடன் இருக்குமாறும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழில் உள்ள பணக்காரர்களை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு தன்னை ஒரு மந்திரவாதியாக அறிமுகம் செய்வதுடன் குறித்த நபர்களுக்கு செய்வினை உள்ளதாக கூறி பண மோசடியில் ஈடுப்பட்டு வருகிறார்.

குறித்த நபர் தன்னால் செய்வினையை அகற்ற முடியும் என கூறி அவர்களுக்கு நம்பிக்கை வரும் வகையில் செயற்பட்டு முற்பணமாக ஒரு பெரும்தொகை பணத்தை தனது வங்கி கணக்கு வைப்பிலிடுமாறு கூறுகிறார்.

பின்னர் பணம் வைப்பிலிடப்பட்டதும் அவரது தொலைபேசி இலக்கம் செயலிழந்துவிடுகிறது.

இவ்வாறு குறித்த நபருக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்கு அவரின் பெயர் விபரங்கள் தெரியாததாலும், சிலர் தமது அந்தஸ்து கருதி முறைப்பாடு செய்ய முன் வராததால் அந்த நபரின் ஏமாற்று வேலைகள் தொடர்ந்து கொண்டே உள்ளதால் அது தொடர்பில் மக்களே விழிப்பாக இருக்க வேண்டும் என பொலிஸார் தெரிவித்தனர்.

No comments: