News Just In

9/26/2023 02:35:00 PM

திருகோணமலையில் நீதிமன்ற தடை உத்தரவை மீறி எழுச்சியுடன் தியாகி திலீபனின் நினைவேந்தல்!


திருகோணமலையில் நீதிமன்ற தடை உத்தரவை மீறி எழுச்சியுடன் தியாகி திலீபனின் நினைவேந்தல்



திருகோணமலையில் தியாக தீபம் திலிபனின் நினைவேந்தல் நிகழ்வு நீதிமன்ற தடை உத்தரவை மீறியும் பொலிஸாரின் தடை விதிப்பை மீறியும் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.

நினைவேந்தல் நிகழ்வானது இன்று (26.09.2023) தமிழ் மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில், திருகோணமலை - தபால்கந்தோர் வீதியில் அமைந்துள்ள குளக்கோட்டன் மண்டபத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்றுகூடி நினைவு கூரப்பட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்றத்தினால் பொது அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு பேருக்கு பொலிஸார் தடை உத்தரவு கடிதத்தை வழங்கிய போதும் தடையாளர்கள் தவிர்ந்த ஏனைய பொதுமக்கள் இந்த நிகழ்வை நடாத்தியதுடன் நீதிமன்ற தடை உத்தரவை பாதுகாக்கும் வகையில் பெரும்தொகையான பொலிஸார் குவிக்கபட்டிருந் போதும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் முன்னாள் போராளிகளின் உறவினர்களும் ஒன்றுகூடி மெழுகுவர்த்தி தீபம் ஏற்றி மலர்கள் தூவி மேற்படி நினைவேந்தலை மேற்கொண்டனர்.

திருகோணமலை - துறைமுக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குளக்கோட்டன் மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றபோதும் நூற்றுக்கணக்கான பொலிஸார் மற்றும் வாகனங்கள் குவிக்கப்பட்டு இருந்தன.








No comments: