News Just In

7/11/2023 06:19:00 PM

சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்ற இலங்கையர்!

கடந்த ஜூன் மாதத்திற்கான ஐ.சி.சி.யின் சிறந்த வீரருக்கான விருதை இலங்கையின் வனிந்து ஹசரங்க தட்டிச் சென்றுள்ளார்.

ஸிம்பாப்வேயில் நடைபெற்ற ஐ.சி.சி. உலகக் கிண்ண தகுதி காண் போட்டிகளில் சிறப்பாகச் செயற்பட்ட நிலையில், அவருக்கு இவ்விருது கிடைக்கப்பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியாவின் ட்ரேவிஸ் ஹெட், ஸிம்பாப்வேயின் சீன் வில்லியம்சன் ஆகியோரும் இவ்விருதுக்கான பரிந்துரைப்பட்டியலில் இருந்தனர்.

எனினும், இவர்களை விஞ்சி, வனிந்து ஹசரங்க இவ்விருதை வென்றுள்ளார் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

இது தொடர்பில் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளதாவது, இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு நாம் தகுதி பெற்றுள்ளதால், இலங்கைக்கு முக்கியமான ஒரு தருணத்தில் இவ்விருது கிடைத்துள்ளது.

மாதத்திற்கான ஐ.சி.சியின் சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டதால் நான் கௌரவமும் அடைந்துள்ளேன்' என தெரிவித்துள்ளார்.

No comments: