மட்டக்களப்பு மாவட்டத்தின், மாங்கேணியில் மாபெரும் சமாதானப் பெருவிழா – 2023 எனும் நிகழ்வு இன்று ஞாயிறு (30.07.2023) மாலை 4 மணிக்கு பெரேயா ஜெபவீடு வளாக திறந்த வெளி அரங்கில் தேச செய்தியாளர் பிரபல சுவிசேஷகர் சகோ.ஜெயம் சாரங்கபாணி அவர்களால் நடைபெறவுள்ளதாக இதன் ஏற்பாட்டுக் குழுவின் சிரேஸ்ட ஊடக இணைப்பாளர் தேவதாஸ் சவரிமுத்து தெரிவித்துள்ளார்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மக்களின் ஆன்மீக விடுதலைக்காக ஆத்தும பாரத்தோடு சுமார் 42 வருடங்கள் ஆவிக்குரிய வாழ்வில் இறை பணியில் அயராது உழைத்து வரும் முகத்துவார “மிஸ்பா ஜெப மிஷனரி” ஊழியத்தின் ஸ்தாபகரும், போதகரும், சுவிசேஷகருமான சகோ.ஜெயம் சாரங்கபாணி அவர்களின் தேவ செய்தியுடனான மாபெரும் ஜெப ஒன்றுக்கூடுகை மட்டக்களப்பு, வாகரை, மாங்கேணியில் பெரேயா ஜெபவீடு வளாக திறந்தவெளி அரங்கில் மக்களின் ஆசீர்வாதத் திற்காக ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது.
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
No comments: