News Just In

7/26/2023 05:06:00 PM

இலங்கை வந்த சுற்றுலாப்பயணிகளுக்கு நடந்த துயரம்!

கொஸ்லந்த காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஹிவல்கந்துர பகுதியில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வான் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்து சம்பவம் இன்று (26) காலை வெல்லவாய – கொஸ்லந்த பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது, ​​வானில் சாரதி மற்றும் நான்கு பயணிகள் பயணித்துள்ளதுடன், விபத்தில் எவருக்கும் பாரிய காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வான் பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த காவல் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: