News Just In

7/28/2023 12:33:00 PM

ஆனைக்கோட்டையில் மாதா சிலைகள் சேதம்!



ஆனைக்கோட்டையில் நான்கு தேவாலயங்களில் மாதா சிலைகள் இனம் தெரியாதவர்களால் நேற்றிரவு சேதமாக்கப்பட்டுள்ளது

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள நான்கு தேவாலயங்களில் காணப்பட்ட மாதா சொரூபங்கள் இனம் தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

No comments: