கொழும்பு - பதுளை தனியார் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
அப் பேருந்து கவிழ்ந்து இன்று (15) காலை விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில்15 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தின் 4 சக்கரங்களும் மேலே உள்ளவாறு கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெமோதர நீர் வழங்கல் சபைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
காயமடைந்தவர்கள் இரண்டு அம்புலன்ஸ் வண்டிகளில் வைத்தியசாலைக்கு ஏற்றிச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: