News Just In

6/22/2023 06:42:00 PM

மட்டக்களப்பு புதிய மாநகர ஆணையாளர் இன்று கடமைஏற்பு!

 புதிய மாநகர ஆணையாளர் இன்று கடமைஏற்பு!




(மட்டக்களப்புமொகமட் தஸ்ரிப் லத்தீப்)


மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக நியமனம் பெற்ற  கிழக்கு மாகாணமுன்னாள்  மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் எஸ். சிவலிங்கம் இன்று மட்டக்களப்பு மாநகர சபை ஆணையர் பதவி கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன் போது முன்னாள் மாநகர ஆணையாளரும் கிழக்கு மாகாண மேலதிக மாகாண கல்விபணிப்பாளராக நியமனம் பெற்றுள்ள எஸ் .மதிவண்ணன் மாநகரப் பொறியியலாளர் திருமதி எஸ் சித்ராதேவி உட்பட மாநகர உயர் அதிகாரிகள் பணியாளர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்தப் பதவியேற்பினை அடுத்து மாநகர ஆணையாளர் சிவலிங்கம் உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் சிறப்புரையாற்று கையில் பணியாளர்களை பழிவாங்குவது தமது நோக்கம் அல்ல என்றும் மட்டக்களப்பு மாநகர மக்கள் எதிர்பார்க்கின்ற நல்ல சேவைகளை மக்களுக்கு இலகுவாக பெற்றுக் கொடுப்பதே தமது பிரதான நோக்கம் என்றும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அனைத்து பணியாளர்களும் தமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

புதிதாக கடமையெற்ற மாநகர ஆணையாளர் மாநகர சபையின் கடமை பிரிவுகளுக்கு சென்று நிலைமைகளை அவதானித்ததுடன் மாநகர சபையால் மேற்கொள்ளப்படும் தீயணைப்பு மற்றும் கழிவகற்றல் உட்பட வெளிக்களப்பிரிவு வேலைத்தளங்களையும் நேரில் சென்று பார்வை யிட்டார்


No comments: