News Just In

6/25/2023 03:48:00 PM

திருமலை மான்களை பாதுகாக்க கிழக்கு ஆளுநரின் செயற்றிட்ட நடவடிக்கை!



திருமலையில் மான்களை பாதுகாக்க கிழக்கு ஆளுநரின் செயற்றிட்ட நடவடிக்கை!



திருகோணமலை நகரில் உள்ள மான்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் செயற்பாடு நேற்று சனிக்கிழமை (24) ஆரம்பிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சுற்றுலா பணியகம் மற்றும் திருகோணமலை நகரசபையின் அனுசரணையுடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை நகரசபை மற்றும் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம் இணைந்து திருகோணமலை நகரில் உள்ள மான்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் செயற்திட்டத்தை ஆரம்பித்து வைத்தன.

மேலும், இந்த செயற்றிட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தவிசாளர், திருகோணமலை நகரசபை செயலாளர், திருகோணமலை பிரதேச செயலாளர், அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, கடந்த காலங்களில் திருகோணமலையில் 20க்கும் மேற்பட்ட மான்கள் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டு உயிரிழந்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது என்றும், மான்களின் பாதுகாப்பு, அவற்றின் உணவு போன்ற விடயங்களை கவனிக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் அதிகமான மான்களைக் கொண்ட இடமாக திருகோணமலை திகழும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


No comments: