News Just In

3/06/2023 08:26:00 AM

யாழ்ப்பாணத்தில் தவறான முடிவை எடுத்த இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!

யாழ் பாசையூர் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் இன்றைய தினம் (05-03-2023) இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞர் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதிக்கு சென்று அங்குள்ள மரம் ஒன்றில் கயிற்றினை கட்டி அதில் தொங்கி உயிர் மாய்த்துள்ளார்.
அவரது கையில் உள்ள வசனங்களை பார்வையிட்ட பொலிஸார், இச்சம்பவம் காதல் தோல்வியால் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

குறித்த இளைஞரின் உடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments: