News Just In

3/27/2023 07:13:00 AM

யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து -வான் சாரதி உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் கொடிகாமம் - மிருசுவில் பகுதியில் சென்ற வான் மரத்துடன் மோதியநிலையில் வான் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் பரந்தனை சேர்ந்த 27 வயதான குமாரசாமி கஜீபன் என தெரியவருகிறது.

இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை(27) அதிகாலை 3.30 மணியளவில் கொடிகாமம் - மிருசுவில் பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக கொடிகாமம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments: