News Just In

3/12/2023 09:13:00 AM

உழவு இயந்திரம் தலைகீழாக பிரண்டதில் சாரதி உயிரிழப்பு..!

மட்டு ஆயித்தியமலையில் வயில் உழவில் ஈடுபட்ட உழவு இயந்திரம் தலைகீழாக பிரண்டதில் அதன் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு ஆயித்தியமலை வயல் பகுதியில் உழவு இயந்திரத்தால் வயல் உழுது கொண்ட போது உழவு இயந்திரம் தலைகீழாக பிரண்டதில் அதனை செலுத்திய சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சனிக்கிழமை (11) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆயித்தியமலை நெல்லூரைச் சேர்ந்த 34 வயதுடைய தர்மதாசா சதீஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த வயலில் சம்பவதினமான இன்று பிற்பகல் உழவு இயந்திரத்தால் உழும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வயலில் உழவு இயந்திரத்தின் பின்பக்க சக்கரங்கள் புதைந்ததையடுத்து உழவு இயந்திர முன்பகுதி மேல் எழுந்து தலைகீழக பிரண்டுடதையடுத்து அவர் கீழ் விழுந்ததில் கலப்பையில் தலை அடிபட்டு படுகாயமடைந்ததையடுத்து சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து அவரை காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

No comments: