News Just In

2/13/2023 08:00:00 AM

நீதிவானை அறையில் வைத்து பூட்டிவிட்டு உத்தியோகபூர்வ காரை கடத்திய கொள்ளையன்!

நீதிவானை அறையில் வைத்து பூட்டிவிட்டு அவருடைய உத்தியோகபூர்வ வாகனத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தொடர்பில் நீதிவான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, குளியாப்பிட்டிய மேலதிக மாவட்ட நீதிவான் அமில ஸ்ரீசம்பத் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை பிலியந்தலை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிலியந்தலை மடபாதவில் உள்ள தனது சொகுசு வீட்டை வாடகைக்கு விடப்போவதாக நீதிவான் இணையத்தளம் ஒன்றில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதன்படி, தனது வீட்டை வாடகைக்கு எடுக்க விரும்பிய நபரை சந்திப்பதற்காக நீதிவான் தனது சொகுசு காரில் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இந்தநிலையில் குறித்த நபர் அந்த இடத்துக்கு முச்சக்கர வண்டி ஒன்றில் சென்றுள்ளார். பின்னர், நீதிவான் தமது வீட்டைக் காண்பிக்கும்போது இதன்படி குறித்த நபர் நீதிவானை மாடி அறையில் வைத்து பூட்டி விட்டு நீதிவானின் 6 மில்லியன் பெறுமதியான சொகுசு காருடன் தப்பிச் சென்றுள்ளார்.

நீதிவான் தனது காரின் சாவியை கீழ் மாடியில் வைத்திருந்ததால் சந்தேகநபர் காருடன் தப்பிச் சென்றுள்ளார். எனினும், நீதிவான், பூட்டப்பட்டிருந்த அறையின் ஜன்னல் வழியாக குதித்து தப்பியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments: