News Just In

2/05/2023 09:32:00 AM

இலங்கையில் குடும்பம் ஒன்றுக்கு கிடைத்த பெரும் அதிர்ஷ்டம்!

கதிர்காமம் – கொச்சிபத்தான பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு, 5 நீல இரத்தினக்கற்கள் கிடைத்துள்ளன.

கதிர்காமம் யாத்திரைக்கு செல்லுபவர்களுக்காக, பூசைத் தட்டுகளை விற்பனை செய்யும் மூன்று வர்த்தகர்களுக்கே, 5 நீல இரத்தினக்கற்கள் கிடைத்துள்ளன.

அண்மைக் காலமாக கதிர்காமம் – கொச்சிபத்தான பகுதியில், இரத்தினக்கல் தோண்டும் பணிகள் இடம்பெறுகின்றன.

இவ்வாறான நிலையில், 3 பேருக்கு 5 இரத்தினக்கற்கள் கிடைத்ததையடுத்து, அந்த இடத்திற்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த 3 பேருக்கும் கிடைத்த 5 இரத்தினக்கற்களும், எலஹர பிரதேசத்தில் உள்ள வர்த்தகர் ஒருவருக்கு, சுமார் ஒரு கோடி ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: