News Just In

2/12/2023 08:25:00 AM

அரச வாகனங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள திடீர் முடிவு!

அனைத்து அரச நிறுவனங்களிலும் முன்பதிவு செய்யப்பட்ட வாகனங்களை அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்தும் வகையில் கட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திறைசேரி செயலாளர் சிறிவர்தன இது தொடர்பில் அனைத்து பிரதானிகளுக்கும் அறிவித்துள்ளார்.

முடிந்தளவில் ஒன்லைன் முறைகளைப் பயன்படுத்தி கூட்டங்கள் மற்றும் மாநாட்டு கலந்துரையாடல்களை நடத்துவதன் மூலம் போக்குவரத்துத் தேவைகள் ஏற்படுவதை மட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது தவிர, எல்லை, பிரதேச, துணை அலுவலகங்களால் எளிதில் செய்யக்கூடிய கடமைகள் மற்றும் சேவைத் தேவைகளுக்கான போக்குவரத்து வசதிகளின் செலவைக் குறைக்கவும் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

No comments: