துருக்கியில் இன்று ஏற்பட்ட பாரிய பூகம்பத்தில் அண்டை நாடுகளான சிரியாவிலும் அதன் தாக்கம் உணரப்பட்ட நிலையில் பூகம்பத்தில் 1300 இற்கு அதிகமானோர் இதுவரை உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்த பூகம்பத்தில் சிக்கி உயிர்பிழைத்த பலர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர் .
அந்தவகையில் துருக்கியின் அடனா நகரில் ஐந்தாம் மாடியில் வசிக்கும் ஒருவர் தனது குடும்பம் முழுவதும் பூகம்பத்தினால் இறந்துவிடும் என அஞ்சியதாக தெரிவித்துள்ளார்.
நான் எனது வாழ்க்கையில் இதனை போல ஒன்றை முன்னர் அனுபவித்ததில்லை ஒரு நிமிடத்திற்கு நிலம் ஆடியது என அவர் தெரிவித்துள்ளார். ஏனைய அறைகளில் இருந்த உறவினர்களை அழைத்து கூக்குரலிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பூகம்பம் ஏற்பட்டுள்ளது நாங்கள் அனைவரும் ஒரே இடத்தில் இறப்போம் என்பதே எனதுமனதில் தோன்றியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பூகம்பம் முடிவிற்கு வந்ததும் நான் வீட்டை விட்டு வெளியே தப்பிவந்தேன் என்னால் எதனையும் எடுத்துவரமுடியவில்லை என தெரிவித்த அவர், காலில் செருப்புடன் வீதியில் நிற்கின்றேன் என்னை சுற்றி நான்கு கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன என கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.
No comments: