News Just In

12/14/2022 08:05:00 AM

ஐரோப்பிய நாட்டில் இருந்து கணவன் அனுப்பிய பணத்தில் காதலனுடன் கனடாவுக்கு கப்பலேறிய யாழ் மனைவி!

ஐரோப்பிய நாடொன்றில் கணவன் வேலை செய்து யாழில் உள்ள மனைவிக்கு காசை அனுப்பிக் கொண்டு இருந்த நிலையில் மனைவி காதலனுடன் கனடாவுக்கு கப்பலேறிய சம்பவம் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது.

கனடாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 300 இற்கு அதிகமான இலங்கையர்கள் , நடுக்கடலில் தத்தளித்த நிலையில் மீட்கப்பட்டு வியந்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறு சட்டவிரோதமாக கனடா புறப்பட்டு அகப்பட்டுக்கொண்டவர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்ப பெண் ஒருவர் , கணவர் வெளிநாட்டில் இருக்க காதலனுடன் கப்பலேறியுள்ளார்.

குறித்த பெண்னின் கணவர் ஐரோப்பிய நாடொன்றில் வசித்துவருவதாக கூறப்படுகின்றது. அங்கு நித்திரையின்றி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்ற அவர் ஓடிக்கொண்டிருக்கையில் , மனைவி வேறொருவருடன் கனடாவுக்கு கப்பலேறியுள்ளார்.

இந்நிலையில் கணவர் மனைவியை தன்னுடன் அழைக்க ஸ்பொன்சர் எடுக்க தயாரான நிலையில் இப்படி ஒரு சம்பவம் இடம்பெற்றுவிட்டதே என புலம்பும் காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது.

மேலும் கணவனை ஏமாற்றி பெருந்தொகை பணத்தை ஏமாற்றிய குறித்த பெண்ணுக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் அவர் முறைப்பாடும் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

No comments: