(எச்.எம்.எம்.பர்ஸான்)
வாழைச்சேனை முகத்துவார பகுதி கடலில் மூழ்கி நபரொருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.வாழைச்சேனை முகத்துவாரத்தை அண்மித்த கடலில் பழுதடைந்த இயந்திரப் படகு ஒன்றை மீட்டு வருவதற்காக சென்ற போதே இளம் குடும்பஸ்தர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இயந்திரப் படகொன்றில் திங்கட்கிழமை (19) அதிகாலை 2 மணியளவில் நான்கு பேர் சென்றுள்ளனர்.இவ்வாறு சென்ற போது படகில் இருந்தவர் கடல் அலையில் தூக்கி வீசப்பட்டு நீரில் மூழ்கியதாக படகில் சென்ற மற்றைய நபர்கள் குடும்பத்தாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு கடலில் மூழ்கி காணமல் போனவர் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை கலைஞர் வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய அஜுன் பயாஸ் எனும் இளம் குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடலில் தவறி விழுந்து காணாமல் போயுள்ள நபரை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: