News Just In

11/22/2022 09:19:00 AM

உள்ளக்கிடங்கு" சிறுகதை நூல் வெளியீடும் அறிமுகமும்.





- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

“அன்பின் பாதையின் எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின்" ஏற்பாட்டில் ஆர்த்திகா சுவேந்திரனின் முதலாவது “உள்ளக்கிடங்கு" சிறுகதை தொகுதி வெளியீடும் அறிமுகமும் ஞாயிற்றுக்கிழமை (20.11.2022) திருகோணமலை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறற்றது.

அன்பின் பாதை சமூகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரொசில்டா அன்டோவின் இணைப்பாக்கத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சரண்யா சுதர்ஸன் சிறப்பு அழைப்பாளர்களாக ஓசை கவிதைச் சிற்றிதழ் ஆசிரியர் கவிஞர் மூதூர் முஹைதீன் மற்றும் சட்டத்தரணியும் சமாதான நீதிவானுமாகிய ஐஸ்வர்யா சிவகுமார்> மகுடம் ஆசிரியர் வி. மைக்கல் கொலின் சண்முகலிங்கம் அர்ஜுன் கவிஞர் தி. லலிதகோபன் ஆகியோருட்பட கலை இலக்கிய ஆர்வலர்கள்> கலைஞர்கள்> எழுத்தாளர்கள் ஆகியோரும் அதிதிகளாக பங்குபற்றிச் சிறப்பித்தனர்.

நூலின் முதற் பிரதி கதாசிரியரால் அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டில் பயிலும் ஆர்த்திகா சுவேந்திரனின் “மல்லிகை மொழி” எனும் கவிதை நூல் ஏற்கெனவே வெளிவந்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.







No comments: