News Just In

9/24/2022 12:28:00 PM

ஒன்பது நூல்களின் அறிமுக விழா!



!
பைஷல் இஸ்மாயில் -
மூதூர் - சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் பேராசிரியர் பாலசுகுமாரின் ஒன்பது நூல்களின் அறிமுக விழா எதிர்வரும் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை மெதடிஸ்த மகளிர் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் (திருமதி) சரண்யா சுதர்சன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நூல் அறிமுக விழாவுக்கு கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மூ.கோபாலரத்தினம் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
சேனையூர் கலம்பகம், கரைகள் கடந்து, Eezha Natiyam, Inniyam & Music & Dance of Eazham Tamilians, கறுப்பி, கொடி எழு அன்னப்புரவி, தமிழ் மரபில் சிவாஜி, கணேசனின் நடிப்பு ஈழ நாட்டியம், ஓ தோழனே நந்தினி, நஞ்சுமிழும் காளான்கள் என்ற இந்த 9 நூல்களின் அறிமுகமும் இதன்போது இடம்பெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


No comments: