News Just In

8/05/2022 06:48:00 PM

QR பதிவுகளை அடுத்த 48 மணிநேரத்திற்கு மேற்கொள்ள முடியாது : எரிசக்தி அமைச்சர்!

புதிய பயனர்களுக்கான எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக QR பதிவுகளை அடுத்த 48 மணிநேரத்திற்கு மேற்கொள்ள முடியாது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணனி அமைப்பில் ஏற்பட்ட பராமரிப்பு பணி காரணமாகவே இந்த இடையூறு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உரிய பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் மீண்டும் QR குறியீட்டில் பதிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: