News Just In

8/16/2022 11:32:00 AM

சர்ச்சைக்குரிய கப்பல் ஹம்பாந்தோட்டை வந்தடைந்தது !





சர்ச்சைக்குரிய யுவான் வான்-5 என்ற சீன ஆராய்ச்சிக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இன்று காலை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கப்பல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்படவுள்ளது.

கடந்த 11 ஆம் திகதி கப்பல் நாட்டை வந்தடையவிருந்த நிலையில் உரிய அனுமதி கிடைக்காததால் கப்பலின் வருகை தாமதமானது.

குறித்த கப்பலினால் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி காரணமாக இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுக்கூடும் என இந்தியா குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments: