News Just In

8/26/2022 06:14:00 AM

மட்டக்களப்பில் மண்ணெண்னை விநியோக நடவடிக்கை ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு கடந்த இரண்டு மாதங்களாக காணப்பட்டுவந்த நிலையில் நேற்று(25.08.2022)   முதல் ஆரையம்பதி பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்னை வழங்கப்பட்டு வருகிறது.

பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட ஒரு குடும்ப அட்டைக்கு 1000 ரூபாவிற்கு, மீனவர் சங்கத்தின் சிபாரிசுடன் வரும் மீனவர்களுக்கு 20 லீற்றர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த எரிபொருள் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள 13200 லீற்றர் மண்ணெண்னையினை இரண்டாவது நாளாக இன்றும் மக்களுக்காக விநியோகிக்கப்பட்டு வருவதுடன், பூநொச்சிமுனை, பாலமுனை மற்றும் கிரான்குளம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

.எச்.ஹுஸைன் 

No comments: