News Just In

8/29/2022 06:12:00 AM

மாஞ்சோலை கிராமத்தில் தாய் சேய் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பதுரியா மாஞ்சோலை கிராமத்தில் தாய் சேய் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.தாரீக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், ஓட்டமாவடி பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், ஐ.எஸ்.ஆர்.சி அமைப்பின் திட்ட இணைப்பாளர் ஏ.எல்.ஜுனைட் நளிமி,கிராம சேவை உத்தியோகத்தர் ஏ.ஜி.எம்.பஸ்லி, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.எம்.நூகுத்தம்பி, பதுரியா, மாஞ்சோலை பள்ளிவாயல் நிருவாகிகள், கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

மாஞ்சோலை கிராமத்தில் தாய் சேய் நிலையம் இல்லாமல் பொதுக்கட்டடத்தில் இயங்கி வந்த நிலையில் ஸக்காத் ஹவுஸ் ஸ்டேட் ஒப் குவைத் என்னும் நிறுவனத்தின் நிதி உதவி மூலம் இலங்கையிலுள்ள ஐ.எஸ்.ஆர்.சி அமைப்பினூடாக கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக ஐ.எஸ்.ஆர்.சி அமைப்பின் திட்ட இணைப்பாளர் ஏ.எல்.ஜுனைட் நளிமி தெரிவித்தார்.

எஸ்.எம்.எம்.முர்ஷித்

No comments: