News Just In

8/21/2022 07:36:00 AM

கோட்டாபய ராஜபக்சவின் மீள் வருகை தொடர்பில் வெளியான புதிய தகவல்!

கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24 ஆம் திகதி நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளில் உண்மையில்லை என முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோட்டாபய ராஜபக்ஷவின் வருகையை பலர் எதிர்பார்ப்பதாகவும் ஆனால் அவர் வரும் திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை,மிரிஹானில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட இல்லம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில்,முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இலங்கை வருகை அடுத்த மாதம் (செப்டெம்பர்) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என கொழும்பு அரசியல் மட்டங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச, இம்மாத இறுதியில் நாடு திரும்புவார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இச்செய்தி வெளியாகியுள்ளது.

No comments: