கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் நேற்று (18) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (19) பிற்பகல் உறுதிப்படுத்தியுள்ளார்.
உயிரிழந்த ஐவரில் நால்வர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் 30 வயதுக்குட்பட்ட ஒருவர் மற்றும் 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட ஒருவர் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
30 வயதுக்குட்பட்ட பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்த ஆறு பேரில் ஐந்து பெண்களும் ஒரு ஆண் ஒருவரும் அடங்குவதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments: