மட்டக்களப்பு வவுணதீவு வலையிறவுப் பாலத்தருகில் கனரக லொறி வண்டி ஒன்று வீதியைவிட்டுவிலகி வலையிறவு ஆற்றில் வீழ்ந்த சம்பவம் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த வீதியால் ஒரு லொறியை மற்றய லெறியை முந்திச் செல்ல முற்பட்ட போது இச்சம்பவம் இடம் பெற்றதாக தெரியவருகின்றது.
வீதியை விட்டு விலகி ஆற்றுக்கு குடைசாய்ந்த வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை வாகனத்தில் இருந்த சாரதியும் நடத்துனரும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வவுணதீவு பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: