News Just In

7/13/2022 12:21:00 PM

கோட்டாபய இறுதி இலக்கை அடைந்த பின்னரே பதவி விலகல் கடிதம் கிடைக்கும்! தற்போது வெளியான தகவல்!


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று மாலை தனது இறுதி இலக்கை அடைந்த பின்னரே தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்புவார் என அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை நேரப்படி இரவு 8 மணியளவில் கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
பதவி விலகல் கடிதம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை




ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என சபாநாயகர் அலுவலகம் இன்று காலை உறுதிப்படுத்தியுள்ளது.

அதிகாலையில் இலங்கை விமானப்படையின் விமானத்தின் ஊடாக நாட்டை விட்டுப் புறப்பட்ட கோட்டாபய ராஜபக்ச மாலைதீவு சென்றடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments: