(எச்.எம்.எம்.பர்ஸான்)
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோலை பெற்றுக்கொள்ள ஓட்டமாவடி பிரதேசத்தையும் தாண்டி வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை காணமுடிந்தது.
குறித்த எரிபொருள் நிலையத்தில் நேற்று (19) பெற்றோல் விநியோகிக்கப்படும் எனும் தகவலை அறிந்து கொண்ட பொதுமக்கள் நேற்றுமுன்தினம் மாலை முதல் வரிசையில் காத்து நிற்கின்றனர்.
பெற்றோலுக்காக காத்து நிற்கும் இந்த வரிசை வாழைச்சேனையிலிருந்து சுமார் மூன்று கிலோ மீற்றர் தூரம் தாண்டி ஓட்டமாவடி வரை நீண்டு சென்றது.
எனினும், பெற்றோல் விநியோகிக்கப்படாமல் டோக்கன்கள் மாத்திரமே விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments: