News Just In

6/13/2022 06:25:00 AM

நாட்டில் இன்றுமுதல் எரிபொருள் நெருக்கடி மேலும் மோசமடையும்!

நாட்டில் இன்று முதல் எரிபொருள் நெருக்கடி மேலும் மோசமடையும் என ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் புள்ளிவிபரங்களின்படி இன்னும் நான்கு நாட்களுக்கு மட்டுமே நாட்டில் டீசல் கிடைக்கும் என அதன் அழைப்பாளர் ஆனந்த குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு பணம் செலுத்தப்படவில்லை. கப்பல்கள் நிறைய உள்ளன எனினும் பணம் செலுத்தப்படவில்லை.

இதனால் இன்று முதல் மக்கள் வரிசையில் நிற்க வேண்டும். வரிசையில் நின்றாலும் எரிபொருள் பெற முடியாத நிலை ஏற்படும் எனவும் கூறியுள்ளார்.

No comments: