News Just In

5/11/2022 06:31:00 AM

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் காவல்துறை மா அதிபர் சி.டீ. விக்ரமரத்ன ஆகியோரை மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு!

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் காவல்துறை மா அதிபர் சி.டீ. விக்ரமரத்ன ஆகிய இருவரையும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரையும் இன்றைய தினம் முற்பகல் 10 மணிக்கு மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் அவர்களிடம் மனித உரிமை ஆணைக்குழு வாக்குமூலம் பெறவுள்ளதாக ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் வன்முறைச் சம்பவங்கள் தொடரும் நிலையில், தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 12ஆம் திகதி காலை 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: