News Just In

5/05/2022 10:40:00 AM

நாளாந்த மின் துண்டிப்பு 5 மணி நேரமாக அதிகரிக்கலாம் !



நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் கட்டமைப்பு செயலிழந்தமை காரணமாக நாளாந்த மின் துண்டிப்பை 5 மணி நேரமாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அணில் ரஞ்சித் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போது அமுல்படுத்தப்படும் 3 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மேலதிகமாக மின் துண்டிப்பு காலத்தை அதிகரிக்க வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு அறியப்படுத்தியுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

No comments: