ரம்புக்கனையில் நேற்றைய தினம் மோதல் இடம்பெறுவதற்கு முதல் காரணத்தை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
வாகனத்தை மறைத்து அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்த மக்களை கலைப்பதற்கு பொலிஸ் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
அதற்கமைய முதலில் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொள்ளுமாறும், பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்குமாறு பொலிஸ் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
எனினும் மக்கள் குழப்பம் ஏற்படுத்தும் வகையிலும் எரிபொருள் பவுஸரிற்கு தீ வைக்க முயற்சித்தமையினாலேயே காலுக்கு கீழ் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டதாக பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிரதான காரணமாக பொலிஸாரே உள்ளளமை அம்பலமாகி உள்ளது. மக்கள் மீது தாக்குதல் நடத்துமாறு பொலிஸ் அதிகாரி ஒருவர் உத்தரவிடும் காட்சிகள் அடங்கிய காணொளி ஒன்று வெளியாகி உள்ளது. இதன்மூலம் பொலிஸார் பொய்யான குற்றச்சாட்டுக்கள் அம்பலமாகி உள்ளன.
No comments: