News Just In

4/18/2022 05:53:00 AM

அரச தலைவரின் அதிகாரங்களை அதிகரிக்கும் 20வது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம்!

அரச தலைவரின் அதிகாரங்களை அதிகரிக்கும் 20வது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, நாளை நடைபெறவுள்ள கட்சித் தலைமைக் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்படும் எனத் தெரியவருகிறது.

இந்த தீர்மானத்தை நடாளுமன்றத்தில் சமர்ப்பித்து எதிர்காலத்தில் நிறைவேற்றவும் அரச தலைவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதனால் அரச தலைவரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு நாடாளுமன்றம் மற்றும் பிரதமருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்படும்.

2015 ஆம் ஆண்டு அப்போதைய நல்லாட்சி அரசாங்கம் 19 ஆவது திருத்தத்தை கொண்டு வந்து அரசத தலைவரின் அதிகாரங்களை கடுமையாக குறைத்து நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை அதிகரித்தது.

ஆனால் 2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் மீண்டும் அரச தலைவரின் பதவியை பலப்படுத்த நடவடிக்கை எடுத்தது.இதனையடுத்து 20 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: