இராஜாங்க அமைச்சர், காஸ் சிலிண்டர் விநியோகிக்கும் கடையொன்றை கடந்து சென்ற போது, அங்கு வரிசையில் நின்றுக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் காஸ் சிலிண்டரினால், அமைச்சரின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், பயணம் செய்துகொண்டிருந்த வாகனத்தின் மீதே, இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்த சம்பவம் கேகாலை, ரன்வல சந்தியில் இடம்பெற்ற நிலையில் அங்கு சற்றுநேரம் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
எனினும், அமைச்சர் சென்ற வாகனத்துக்கு எந்தவிதமான சேதங்களும் ஏற்படவில்லை எனவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments: