News Just In

3/15/2022 06:48:00 PM

ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் சரீப் அலி வித்தியாலயம் முதலிடம் பெற்று சாதனை!

வெளியான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றின் படி ஓட்டமாவடி சரீப் அலி வித்தியாலயம் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் முதலாம் இடத்தையும் மட்டக்களப்பு மத்தி வலயத்தில் இரண்டாம் இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளதாக பாடசாலையின் அதிபர் ஏ.சீ.எம். அஜ்மீர் தெரிவித்தார்.

குறித்த பாடசாலையில் இம்முறை 32 மாணவர்கள் பரீட்சையில் தோற்றி வெட்டுப் புள்ளியை தாண்டி சாதனை படைத்துள்ளனர்.

அத்துடன், அபூதாஹிர் பாத்திமா ரயா எனும் மாணவி 187 புள்ளிகளைப் பெற்று ஓட்டமாவடி கோட்டத்தில் முதல்நிலையை பெற்றுள்ளார்.

மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைக்க மாணவர்களை தயார் படுத்திய ஏ.எஸ்.ஜௌபர், ஏ.எம்.எம்.பாயிஸ், ஏ.பி.பர்ஸானா ஆகிய ஆசிரியர்களுக்கும் ஆர்வத்துடன் கல்வி கற்ற மாணவர்களுக்கும் சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோருக்கும், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களுக்கும் அதேபோன்று சகல வழிகளிலும் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கிய வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா, கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர் ஆகியோருக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் அதிபர் ஏ.சீ.எம்.அஜ்மீர் தெரிவித்துள்ளார்.

(எச்.எம்.எம்.பர்ஸான்)

No comments: