News Just In

2/27/2022 01:37:00 PM

உக்ரைனியரின் எதிர்த்தாக்குதல்கள் - ஸ்தம்பித்துள்ள ரஸ்யர்கள்!

  உக்ரைன் தலைநகரை நோக்கிய ரஸ்ய படையின் முன்னேற்றம், உக்ரைன்  படையினரின் கடும் எதிர்த்தாக்குதலால் ஸ்தம்பித்துள்ளதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.எனினும் வான்வழித்தாக்குதல்களை ரஸ்யர்கள் மேற்கொள்ளலாம் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் நிலத்தடி பதுங்குக்குழிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் வழங்கப்பட்ட செய்திகளின்படி, நேற்று இரவுப்பொழுதை குடியிருப்பாளர்கள் பதற்றமான சூழ்நிலையில் கழித்துள்ளனர்.தலைநகர், கியூவில் இருந்து 40 கிலோமீட்டர் தெற்கே உள்ள எண்ணெய் முனையத்தில் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படும் நிலையில், தலைநகரில் இதுவரை வெடிப்புகள் எதுவும் பதிவாகவில்லை. 

இதேவேளை பிந்திய தாக்குதல்களின் போது 64 உக்ரைனியர்கள் பலியானதுடன் 240பேர் காயமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.இதற்கிடையில் கியூவின் புறநகர்ப் பகுதியில் தாக்கப்பட்ட எண்ணெய் கிடங்கில் இருந்து புகை மற்றும் நச்சுப் புகை வெளியாவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குடியிருப்பாளர்கள் தங்கள் ஜன்னல்களை இறுக்கமாக மூடிக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர். அத்துடன்  பல குடியிருப்பாளர்கள் ஏற்கனவே நிலத்தடியில் பாதுகாப்பை நாடியுள்ளனர்

No comments: