News Just In

1/07/2022 09:39:00 AM

தமிழ் பேசும் கட்சிகளால் தயாரிக்கப்பட்ட பொது ஆவணம் கைச்சாத்திடப்பட்டுள்ளது!


இந்தியப் பிரதமரிடம் கையளிப்பதற்காக, தமிழ்ப் பேசும் கட்சிகளால் தயாரிக்கப்பட்ட பொது ஆவணத்தில், முஸ்லிம் மற்றும் மலையக கட்சிகள் தவிர்ந்த, ஏனைய கட்சிகள் இன்று கொழும்பில் வைத்து கைச்சாத்திட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கட்சித் தலைவர் என்.ஸ்ரீகாந்தா ஆகியோர், இந்தப் பொது ஆவணத்தில், கையொப்பமிட்டுள்ளனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா நாளை அல்லது நாளை மறுதினம் இந்த ஆவணத்தில் கைச்சாத்திடுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று  செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

No comments: