News Just In

1/13/2022 06:42:00 AM

உலகளாவிய ரீதியில் இலங்கைக்கு கிடைத்த இடம்!

உலக அளவில் கோவிட் தடுப்பூசி ஏற்றுகையில் இலங்கை மூன்றாம் இடம் வகிப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதிலும் 194 நாடுகளில் இலங்கை தடுப்பூசி ஏற்றுகையில் மூன்றாம் இடம் வகிப்பது நாடு என்ற ரீதியில் இலங்கை பெற்றுக்கொண்ட வெற்றியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹொரண பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதிகளவில் தடுப்பூசி ஏற்றுவதன் மூலம் நாட்டில் ஏற்படக்கூடிய உயிர் ஆபத்துக்களை தவிர்க்க முடியும் என கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

No comments: