மட்டக்களப்பு - நொச்சிமுனையிலுள்ள விபுலானந்தா அழகியற்கற்கை கல்லூரிக்கு முன்பாக சற்று முன்னர் இடம்பெற்ற இஸ்கூட்டி மோட்டார் வாகனம் மற்றும் உழவு இயந்திரம் இற்கிடையேயான கோரவிபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, புதிய கல்முனை வீதியூடாக மட்டக்களப்பினை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த நபரொருவர் உழவு இயந்திரம் வாகனத்தோடு மோதுண்டு சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: